வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி அளவுக்கு நிதி கையிருப்பில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இருப்பில் இருந்து ரூ.70 லட்சம் தொகை திடீரென மாயமானது.. இதுகுறித்து, வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு, அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் அபர்ணா, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், ரூ.70 லட்சம் தொகையில் திருப்பத்தூரைச் சேர்ந்த பூவரசன் (23) என்பவரது வங்கி கணக்கில் ரூ.50 லட்சமும், காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் வங்கியில் பிரபு என்பவரது கணக்கில் ரூ.20 லட்சம் தொகையும் மாற்றியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, பூவரசனை கடந்த நவம்பர் 20-ம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இவர் கொடுத்த தகவலின்பேரில், திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (33) மற்றும் வாணியம்பாடி ராம நாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவா (22) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்த சம்பத் என்பவரை தேடி வந்தனர்.
தொடர் விசாரணையில், இந்த நூதன திருட்டில் மூளையாக செயல்பட்ட சேலம் மாவட்டம் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலக (பி.டி.ஓ) தற்காலிக கணினி ஆபரேட்டர் மோகன் (24) என்பவரை சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இவர்தான் சம்பத் என பெயரை மாற்றி பூவரசன் தரப்பினருக்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். இவர் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கணினி ஆபரேட்டராக பணி யாற்றி வருவதால் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணப் பரிமாற்றம் எவ்வாறு நடைபெறும் என்ற விவரங்கள் அனைத்தும் தெரிந்துள்ளது.
எனவே, ஏதாவது ஒரு வட்டார வளர்ச்சி அலுவலக கருவூல கணக்கு எண் இருந்தால் அதை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்றும், அதற்கான கமிஷன் தொகை தருவதாக பூவரசன் தரப்பினரிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கருவூல அடையாள எண், வங்கிக் கணக்கு விவரங்களை மோகனிடம் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்டபடி காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக கணக்கில் இருந்து பணத்தை மாற்றிய நிலையில் புகார் காரணமாக வங்கிகளுக்கு மாற்றப்பட்ட பணத்தை காவல் துறையினர் முடக்கினர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதான நிலையில் முக்கிய குற்ற வாளி மோகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: