• Fri. Mar 29th, 2024

செங்கோலை நாடாளுமன்றத்தில் வைப்பதை முழுமையாக நான் வரவேற்கிறேன். -ஓபிஎஸ் பேட்டி

ByKalamegam Viswanathan

May 27, 2023

தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உளப்படியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதை முழுமையாக நான் வரவேற்கிறேன். -ஓபிஎஸ் பேட்டி
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது:
தமிழக முதல்வர் சிங்கப்பூர் பயணம் குறித்த கேள்விக்கு:
தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு எந்தெந்த முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பதன் விவரம் வந்த பிறகு பதில் சொல்கிறேன்.
செங்கோல் விவகாரம் குறித்த கேள்விக்கு:
தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உளப்படியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதை முழுமையாக நான் வரவேற்கிறேன்.
கரூரில் வருமான வரித்துறையினர் சோதனையின்போது நடைபெற்ற தகராறு குறித்த கேள்விக்கு:
கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக அறிக்கை விடுத்துள்ளேன் என ஒ பன்னீர் செல்வம் கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *