தமிழகசட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், “பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற பணம் என்பது, முழுமையாக குடும்பத்திற்காக பயன்படுகிறது.
ஆண்கள் கையில் வரும் வருமானம் கூட பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும்” என்று கூறியதால், சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை, மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு இத்துறைகளின் அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.மூர்த்தி ஆகியோர் பதிலளித்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக காலை 10 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், “மகளிர் சுய உதவிக்குழுக்கள் வறுமையைப் போக்குவதில் மிக முக்கியமான பங்கு வகித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பெண்களுடைய வருமானம் என்பது முழுக்க முழுக்க குடும்பத்திற்காக செலவு செய்யப்படுகிறது. குடும்பத்தினருடைய பாதுகாப்பு, உடல்நலம் அல்லது பராமரிப்பு, குழந்தைகளின் கல்வி என்று முழுக்க முழுக்க பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற பணம் என்பது, முழுமையாக குடும்பத்திற்காக பயன்படுகிறது. ஆனால், ஆண்கள் கையில் வரும் வருமானம்கூட பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும். ஆனால் பெண்கள் கையில் கொடுக்கின்ற பணம் முழுக்க முழுக்க குடும்பத்திற்கு போகிறது” என்றார்.
இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை ” என்றார். ஆனாலும் பேரவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அனைவரையும் அமைதியாக இருககும்படி கூறினார். மேலும், “மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யப்படுகிற பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யமுடியுமா என்று கேட்கிறீர்கள், அதை மட்டும் கேளுங்கள்” என்று கூறினார்.
அப்போது வானதி சீனிவாசம், “நான் எல்லோரையும் அப்படி சொல்லவில்லை. மற்றவர்கள் எல்லாம் கொதிக்க வேண்டாம். எதற்கு கொதிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது இன்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய நிலை இருக்கிறது. இதில் ஜெம் போர்டல் குறித்து அமைச்சர் குறிப்பிட்டார். 2016-ம் ஆண்டு மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ், அமைச்சகங்கள், துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், என மின்னணு வாயிலாகத்தான் பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் மோடியின் ஏற்பாட்டின் காரணமாக, கடந்த வருடம் மட்டும் 1 லட்சம் கோடி ஆர்டர் வேல்யூ மட்டும் ஜெம் போர்டலில் கிடைத்துள்ளது.
ஆனால், இதுதொடர்பாக அமைச்சர் அளித்துள்ள பதில் பொதுவானதாக உள்ளது. முன்னணி நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தால், ஏற்கெனவே மத்திய அமைச்சகம், பிளிஃப்கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்றார். ஆனால் அமைச்சர் அளித்த பதிலில் தனியாக இதற்கென்று திட்டம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எந்த நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆயிரக்கணக்கான பொருட்கள் உற்பத்தி செய்கின்ற நிலையில் 69 பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார். எனவே இதற்கான பதிலை எதிர்பார்க்கிறேன் ” என்றார்.
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […] - திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தகோரி சிபிஎம் கையைழுத்து இயக்கம்அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி திருப்பரங்குன்றத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் மாபெரும் கையைழுத்து இயக்கம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் […]
- சொந்தக் கட்சியினராலேயே முதுகில் குத்தப்பட்டேன்..,
உத்தவ்தாக்கரே ஆதங்கம்..!மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவசேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு […] - பா.ஜ.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முடிவு?அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என […]
- கோவில்பட்டி ரயில்நிலையத்தில் கடலைமிட்டாய் விற்பனை அறிமுகம்..!தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்நியைலத்தில், சோதனைமுறையில் 15 நாட்கள் கடலை மிட்டாய் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ரயில்வே […]
- என் நாய்க்கும் ஃப்ளைட் டிக்கெட் போடுங்கள்.,
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா..!என் நாய்க்கும் சேர்த்து ஃப்ளைட் டிக்கெட் போட்டால்தான் ஷட்டிங்கிற்கு வருவேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராகப் பேசியிருப்பதாக […]