முதலமைச்சர் மு.ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவர் என வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. .
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திமுக இளைஞரணி செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.இளைஞரணி தலைவர் இளைஞரணி தலைவராக பதவியேற்றதில் இருந்தே கட்சிப் பணிகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக தான் செயலாளராக பதவி வகித்து வரும் இளைஞரணியில் ஆட்களை சேர்க்கும் பணியில் முழு மூச்சாக இறங்கி 30 லட்சத்துக்கும் அதிகமானோரை திமுகவில் இணைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
2021 தேர்தல் இளைஞரணிக்காகவும், கொரோனா காலத்தில் மக்கள் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கவர்ந்த உதயநிதிக்கு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் சீட் கிடைத்தது. தான் போட்டியிட்ட சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் களத்தில் இறங்கி வீடு வீடாக அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தனது தொகுதியில் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் தொகுதிவாரியாக சென்று திமுகவுக்காக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எய்ம்ஸ்மருத்துவமனை விவகாரத்தைல் கையில் எடுத்து ஒற்றை செங்கல்லோடு மத்திய பாஜக அரசையும் அதன் கூட்டணியாக அதிமுகவையும் விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் செங்கல் போன்று அவர் கையாண்ட நூதன யுக்திகளும் மக்களை அவர் பக்கம் ஈர்த்தன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதேபோன்று பல திரைப்படங்களிலும் அவர் நடித்து உள்ளார். தொடர்ந்து சினிமாக்களில் நடித்தும் வருகிறார்.அதோபோல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலம் மற்றும் தனது இயல்பான பேச்சாற்றலின் காரணமாக உதயநிதி ஸ்டாலின் மக்களை கவர்ந்தார்.
உதயநிதிஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என கடந்த ஆண்டிலிருந்தே அமைச்சர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வந்தார். உதயநிதி மீது வாரிசு அரசியல் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில், ஸ்டாலின் பொறுமை காத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டு அமைச்சராக்க சம்மதம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பரிந்துரை செய்து இருந்தார். இதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற பேச்சுக்களும் தற்போது எழுந்துள்ளன. உள்ளாட்சித் துறை அல்லது விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறையை வழங்க ஸ்டாலின் விரும்பியதாக கூறப்படுகிறது.
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]
- சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பதட்டம்சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் […]
- மோடி அரசுக்கு எதிராக புதிய பிரச்சாரத்தை தொடங்கி காங்கிரஸ்மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி, வீடு வீடாகச் சென்று கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை […]
- ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!மறைந்த திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி […]
- கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்முகவூர் செட்டியார்பட்டி தளவாய்புரம் போன்ற பகுதிகளை சாரந்த 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிவகாசி […]
- கன்னியாகுமரியில் பரபரப்பு…. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்கன்னியாகுமரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்குவாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொட்டாரம் அரசு […]
- லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்நாகர்கோயிலில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. […]
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற க ழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
- கருணை கொலை பற்றி பேசும் தலைக்கூத்தல்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் உருவாக்கத்தில் கடந்த 14 வருடங்களாக படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து […]
- இரட்டை இலை சின்னம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் முடிவுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்இரட்டை இலை சின்னத்தை பெற உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காகஉழைக்கும் போது மனிதனாகிறான்ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போதுஅவன் உண்மையான மனிதனாகிறான். […]