ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளுக்கு கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் நேற்றைய தினம் இறைச்சிக் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது.
கர்நாடகாவில் முஸ்லீம் நடத்தும் இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹலால் இறைச்சிகளை இந்துக்கள் வாங்கக் கூடாது என பாஜக தலைவர்கள் கூறி வந்தனர்.
அதற்கு பதிலாக இந்து வியாபாரிகள் நடத்தும் இறைச்சிக் கடைகளில் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனால் பெங்களூரில் ஹலால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹலால் உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்கள். தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகைக்கு மறுநாள் இந்துக்கள் இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று. இதனால் இந்துக்கள் ஹலால் இறைச்சியை வாங்குவார்களா அல்லது புறக்கணிப்பாளர்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில்தான் யுகாதி பண்டிகை கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. இதன் பிறகு இறைச்சிகயை வாங்குவதற்காக அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதலேயே நீண்ட வரிசையில் இறைச்சி வாங்க காத்திருந்தனர். பெங்களூருவில் பேடராயனபுரா உள்பட 3 இடங்களில் இந்துக்கள் தற்காலிகமாக இறைச்சி கடை அமைத்து இருந்தனர்.
அங்கும் இறைச்சி விற்பனை ஜோராக இருந்தது. கடைகளுக்கு வர இயலாத வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் இறைச்சியை வாங்கினர். பெங்களூருவில் ஸ்ரீராம்புராவில் இறைச்சிக் கடையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 45 ஆண்டுகளாக இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில் இறைச்சிகள் ஹலால் செய்யப்படுகிறதா, அல்லது மின்சார ஷாக்கில் துண்டிக்கப்படுகிறதா என்பது எங்களுக்கு தெரியாது. இந்த கடையில் இறைச்சிகள் நன்றாக இருக்கும். எங்களுக்கு ஹலால் செய்வதா கரன்ட் ஷாக்கா என்பெதெல்லாம் முக்கியம் அல்ல. வாடிக்கையாளர்களுக்கு நல்லதொரு தரமான இறைச்சியை கொடுக்க வேண்டும் என்றார். இந்த கடையின் உரிமையாளர் கூறுகையில், நேற்றைய தினம் 1000 கிலோ மட்டன் விற்று தீர்ந்தது என்றார். கடந்த சில மாதங்களாக ஹிஜாப் பிரச்சினை தலைதூக்கி வந்த நிலையில் தற்போது ஹலால் பிரச்சினை துளிர்க்க தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]