சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் ஆகும்.
சாமியாரின் ஆலோசனையின்பேரில் பங்குச் சந்தையை நடத்தியதாக சர்ச்சை வெளியான நிலையில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இவர் சாமியார் ஒருவரிடம் பங்குச் சந்தை விவரங்களை பகிர்ந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி இவர் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் புகார் உள்ளது. அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர் வீடுகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி இவருக்கு எதிரான புகார்களை அடுக்கி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் தலைமை செயலதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா பங்கு சந்தை தகவல்களை இமய மலையில் இருந்த சாமியார் ஒருவரிடம் பகிர்ந்து உள்ளார். அதேபோல் அந்த சாமியார் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். பல்வேறு ரகசியங்களை இவர் அந்த சாமியாருக்கு பகிர்ந்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது.
இதில் செபி வைத்திருக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்றால், அந்த சாமியாரின் சொல் பேச்சை அப்படியே கேட்டு சித்ரா செயல்பட்டு இருக்கிறார். சாமியாரின் தலையாட்டி பொம்மை போல சித்ரா செயல்பட்டதாகவும், சித்ரா சிஇஓ போல இல்லை. அந்த சாமியார்தான் சிஇஓ போல செயல்பட்டார் என்றும் செபி கூறியுள்ளது. 2016ல் பதவியில் இருந்து விளக்குவதற்கு முன்பு வரை சித்ரா ராமகிருஷ்ணா இது போன்ற தகவல்களை பகிர்ந்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.
20 வருடமாக அண்ட் சாமியாருடன் சித்ரா தொடர்பில் இருந்து இருக்கிறார். இவர் சிஇஓவாக இருந்த காலகட்டத்தில் அனைத்து தகவல்களையும் பகிர்ந்து உள்ளார். முக்கியமாக பங்கு சந்தை இன்று எப்படி இருக்கும் என்ற கணிப்புகள், என்எஸ்இ இன்று செய்ய போகும் பணிகள் என்ன, எதிர்கால திட்டங்கள் என்ன என்று பல விஷயங்களை சித்ரா ராமகிருஷ்ணா அந்த சாமியாரிடம் பகிர்ந்து இருக்கிறார். இதையடுத்து அவருக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 3 வருடம் என்எஸ்இ தொடர்பான எந்த பணிகளிலும் ஈடுபட அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த இமயமலை சாமியார் யார் என்று தெரியாத நிலையில் இன்று ஐடி ரெய்டில் அந்த சாமியார் யார் என்பது குறித்த விசாரணைகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. அந்த சாமியாரின் பெயர் சிரோன்மணி என்று மட்டும் தெரிந்துள்ளது.
ஆனால் இதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சிரோன்மணியின் பேச்சை கேட்டு இவர் பலருக்கு பதவி வழங்கியதாகவும், பலருக்கு அதிக சம்பளம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி இவர் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் புகார் உள்ளது. அவருக்கு கூடுதல் சம்பளம் கொடுப்பதாக என்எஸ்இக்கு கணக்கு காட்டி பொய் சொல்லி பணத்தை மோசடி செய்ததாகவும் இன்னொரு புகாரும் வைக்கப்பட்டு உள்ளது. ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு வருட சம்பளம் 5 கோடி வரை உயர்த்தப்பட சாமியார் சிரோன்மணியின் உத்தரவுதான் காரணம். அந்த சாமியார் பேச்சை கேட்டு இப்படி பலருக்கு சித்ரா சம்பள உயர்வு கொடுத்ததாகவும் புகார் உள்ளது.
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]