சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் ஆகும்.
சாமியாரின் ஆலோசனையின்பேரில் பங்குச் சந்தையை நடத்தியதாக சர்ச்சை வெளியான நிலையில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இவர் சாமியார் ஒருவரிடம் பங்குச் சந்தை விவரங்களை பகிர்ந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி இவர் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் புகார் உள்ளது. அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர் வீடுகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி இவருக்கு எதிரான புகார்களை அடுக்கி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் தலைமை செயலதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா பங்கு சந்தை தகவல்களை இமய மலையில் இருந்த சாமியார் ஒருவரிடம் பகிர்ந்து உள்ளார். அதேபோல் அந்த சாமியார் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். பல்வேறு ரகசியங்களை இவர் அந்த சாமியாருக்கு பகிர்ந்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது.
இதில் செபி வைத்திருக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்றால், அந்த சாமியாரின் சொல் பேச்சை அப்படியே கேட்டு சித்ரா செயல்பட்டு இருக்கிறார். சாமியாரின் தலையாட்டி பொம்மை போல சித்ரா செயல்பட்டதாகவும், சித்ரா சிஇஓ போல இல்லை. அந்த சாமியார்தான் சிஇஓ போல செயல்பட்டார் என்றும் செபி கூறியுள்ளது. 2016ல் பதவியில் இருந்து விளக்குவதற்கு முன்பு வரை சித்ரா ராமகிருஷ்ணா இது போன்ற தகவல்களை பகிர்ந்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.
20 வருடமாக அண்ட் சாமியாருடன் சித்ரா தொடர்பில் இருந்து இருக்கிறார். இவர் சிஇஓவாக இருந்த காலகட்டத்தில் அனைத்து தகவல்களையும் பகிர்ந்து உள்ளார். முக்கியமாக பங்கு சந்தை இன்று எப்படி இருக்கும் என்ற கணிப்புகள், என்எஸ்இ இன்று செய்ய போகும் பணிகள் என்ன, எதிர்கால திட்டங்கள் என்ன என்று பல விஷயங்களை சித்ரா ராமகிருஷ்ணா அந்த சாமியாரிடம் பகிர்ந்து இருக்கிறார். இதையடுத்து அவருக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 3 வருடம் என்எஸ்இ தொடர்பான எந்த பணிகளிலும் ஈடுபட அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த இமயமலை சாமியார் யார் என்று தெரியாத நிலையில் இன்று ஐடி ரெய்டில் அந்த சாமியார் யார் என்பது குறித்த விசாரணைகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. அந்த சாமியாரின் பெயர் சிரோன்மணி என்று மட்டும் தெரிந்துள்ளது.
ஆனால் இதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சிரோன்மணியின் பேச்சை கேட்டு இவர் பலருக்கு பதவி வழங்கியதாகவும், பலருக்கு அதிக சம்பளம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி இவர் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் புகார் உள்ளது. அவருக்கு கூடுதல் சம்பளம் கொடுப்பதாக என்எஸ்இக்கு கணக்கு காட்டி பொய் சொல்லி பணத்தை மோசடி செய்ததாகவும் இன்னொரு புகாரும் வைக்கப்பட்டு உள்ளது. ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு வருட சம்பளம் 5 கோடி வரை உயர்த்தப்பட சாமியார் சிரோன்மணியின் உத்தரவுதான் காரணம். அந்த சாமியார் பேச்சை கேட்டு இப்படி பலருக்கு சித்ரா சம்பள உயர்வு கொடுத்ததாகவும் புகார் உள்ளது.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]