• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அருணாச்சலப் பிரதேசம் அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்..

ByA.Tamilselvan

Oct 5, 2022

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். அருணாச்சலப் பிரதேசம் தவாக் அருகே சென்று கொண்டிருந்த சீட்டா ரக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திடீரென விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.