வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை பொழிவால் கனமழை மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது பஞ்சாப்பில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மேலும், மழையால் ஏக்கர் கணக்கிலான பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதுபற்றி துணை முதல்-மந்திரி ஓ.பி. சோனி கூறும்போது, மழையால் பயிர்களை சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு விரைவில் இழப்பீட்டு தொகையை விடுவிக்கும் என துணை முதல்-மந்திரி என தெரிவித்து உள்ளார்.