குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு உள்ளிட்ட அணைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதுதவிர திருநந்திக்கரை, குலசேகரம், திற்பரப்பு, களியல், பொன்மனை, சுருளகோடு, பூதப்பாண்டி, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்தது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.