• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தலைமை ஆசிரியர்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கலாம்

ByA.Tamilselvan

Sep 19, 2022

கிராமசபை கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி மாநிலம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் வளர்ச்சி, கற்றல்-கற்பித்தல் போன்றவை தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என்றும், இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக கிராம பஞ்சாயத்துகளின் ஆலோசனையைப் பெற்று, கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீண்டும் அடுத்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.