• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

ByJawahar

Jan 22, 2023

முசிறி பகுதிகளில் காணாமல் போன செல்போன் கண்டுபிடித்து, உரியவரிடம் ஒப்படைத்த டிஎஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
கடந்த 2021 .22 ஆம் ஆண்டுகளில் செல்போன்கள் தொலைந்து போன புகாரியின் அடிப்படையில் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரின் காவல்துறை கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.சைபர் கிரைம் வாயிலாக காவலர் சூர்யன் புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், பெரம்பலூர் ,திருச்சி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட விசாரணையில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு உள்ள 12 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை முசிறி காவல் நிலையத்தில் செல்போன் காணவில்லை என்று புகார் கொடுத்தவர்களை வரவழைத்து, அவர்களிடம் டி எஸ்பி யாஸ்மின் செல்போனை வழங்கினார். ஆய்வாளர் செந்தில்குமார் உதவி ஆய்வாளர்கள் திருப்பதி கருணாநிதி பயிற்சி ஆய்வாளர் கோமதி ஆகியோர் காவலர் சூர்யாவை வெகுவாக பாராட்டினர்.