• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தடையை மீறி சென்றதால் எச்.ராஜா கைது

ByA.Tamilselvan

Mar 14, 2023

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவரை கைது செய்தனர். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் எச்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.