பாஜக தலைவரான ஹெச்.ராஜா சர்ச்சைகளின் நாயகன் எனலாம். எங்கே போனாலும் எங்கே மைக்கை நீட்டினாலும் அவருடைய பேச்சு இணையத்தில் டிரெண்ட் அடிக்கும்.
அதாவது நெகட்டிவ் பப்ளிசிட்டி. அவரை திட்டுவதற்காகவே நெட்டிசன்கள் வீடியோவை பிரபலமாக்குவார்கள். அதேபோல மீம் மெட்டீரியல் அரசியல்வாதியும் அவர் தான். இதெல்லாம் ஜாலியாக எடுத்துக்கொண்டு போகலாமா என்று கேட்டால் இல்லை தான். இந்து மதத்தை உயர்த்திப் பேசும் அவர் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரை மிகவும் இழிவாக சித்தரிப்பார்.
மேலும் சிறுபான்மையினர்களை ஆதரிக்கக் கூடிய அமைப்புகள், கட்சிகள் என அனைவரையும் விட்டுவைக்காமல் வசைபாடுவார். இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தை எதிர்த்தோ பாஜகவை எதிர்த்தோ கேள்வியை முன்வைத்தால் ஊடகவியலாளர்களைக் கூட மிகவும் கொச்சையான வார்த்தைகளால் திட்டுவார். இவர் தன்னுடைய பேட்டியில் எப்போதும் கிறிஸ்தவ மதத்தையும் மத போதகர்களையும் டார்கெட் செய்வார். அண்மையில் கூட கிறிஸ்தவ பள்ளிகள் மதம் மாற்றும் கேந்திரங்களாக மாறிவிட்டன என்றார்.
அது மட்டுமில்லாமல் மத போதகர்கள் உடுத்தும் ஆடையையும் விட்டுவைக்காமல் இழிவாகப் பேசினார். அவரின் பேச்சுக்கு கடிவாளம் போட வேண்டும் என்பதால் நீலகிரி மாவட்ட சிறுபான்மை நலக்குழு சார்பில் ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஹெச்.ராஜா சமீப காலமாக கிறிஸ்தவர்களை அவதூறாக பேசி வருகிறார். குறிப்பாக, பாதிரியார்கள் அணியும் ஆடைகளை பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தான் சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்து அவர் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லிவிட்டு அப்படி நான் சொல்லவில்லை, இப்படி எல்லாம் சொல்றாங்கனு நான் உங்க கிட்ட சொல்றேன் உடனே நான் தான் இப்டிலாம் சொல்றேன்னு சொல்லுவாங்க என்று தனது கருத்தில் ஒரு நிலைப்பாடு இல்லாத மனிதர் ஹெச்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]