புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை கைவிட கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆற்றங்கரையில் சில ஆண்டுகளுக்கு முன் 46 மணல் குவாரிகள் செயல்பட்டு, அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் தமிழகத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த மணல் குவாரிகளுக்கு எதிராக பா.ம.க. மேற்கொண்ட அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் மணல் குவாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, இப்போது 7 மணல் குவாரிகள் மட்டும்தான் செயல்பட்டு வருகின்றன. மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போதும் நடத்தி வருகிறார்.
அரசியல் ரீதியாகவும், சட்டப்படியும் போராடி மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கூடாது. அவ்வாறு திறப்பது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்து விடும். இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, மணல் இறக்குமதியையும், எம். சாண்ட் உற்பத்தியையும் அதிகரித்து கட்டுமானத்திற்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
- இஃப்தார் நிகழ்ச்சி மமக தலைவர் ஜவாஹிருல்லா அரசியல் கருத்து..,
- “பட்டியலின மக்களுக்குள் பிளவை தூண்டும் சதி!”
- காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,
- மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..,
- சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் மனு..,
- பவர்நர்சரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா..,
- மகன் சொத்தை அபகரித்து, கவனிக்க மறுப்பதாக தாய் அதிகாரியிடம் கண்ணீர்..,
- நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் மாபெரும் மாநாடு..,
- காமாட்சி அம்மன் கோவிலை தீ வைத்து எரித்து சேதம் பத்து லட்ச ரூபாய் சேதம்..,
- த.வெ.க.வினர் வாக்காளர் பட்டியல் கேட்டு மனு..,







