தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கோத்தலூத்து கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி கொடியவர்களின் கூடாரமாக மாறி வருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் தெற்கு பகுதியிலும் ,கிழக்கு பகுதியிலும் இயற்கை சீற்றத்தின் காரணமாக தரைமட்டமானது. இதனையடுத்து பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும், அதைச் செப்பனிட்டு மீண்டும் சுற்றுச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனையடுத்து பள்ளி வளாகத்திற்குள் இடிபாடுகளுடன் உள்ள சுவர்கள் வழியாக , ஆடு மாடுகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் உள்ளே நுழைந்து தங்கள் இருப்பிடமாக மாற்றி வருகிறது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் உள்ளே நுழைந்து விடுகிறது. இதனால் பகலில் வரும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளும் இரவு நேரத்தை சாக்காக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளில் பள்ளி வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். குடிமகன்களும் உள்ளே நுழைந்து இரவு நேரங்களில் குடித்துவிட்டு பாட்டில் உள்ளிட்ட பொருள்களை வீசிச் செல்கின்றனர்.
இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டால் மிகப்பெரிய பிரச்சினை உருவாகும் என்று பொதுமக்கள் அஞ்சி வருகின்றனர். எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கல்வித் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி சுற்றுச் சுவரை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணிஉலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் […]
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]
- மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவுதென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது […]
- பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் […]
- மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா […]
- நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெறுக சு. வெங்கடேசன் எம்.பிதென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் […]
- பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆலோசனையின் பேரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை […]
- ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி..!உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்கரும்பு […]
- பழனி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், […]
- மரக்காணம் அருகே பறவைகள் சரணாலயம்..!விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பறவைகள் வந்து செல்லும் வலசை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் […]
- அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது- பிரியங்கா காந்திராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அதிகார வெறி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ரியல் ஹீரோ: ஓர் உளவியல் பதிவு..! உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை […]
- நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக […]
- சோழவந்தானில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய […]
- பொது அறிவு வினா விடைகள்