

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்ததால் ஒரு சவரன் 66,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. இதற்கிடையே, கடந்த 21-ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரம் ரூபாயைகடந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்த தங்கத்தின் 64 ஆயிரம் ரூபாயைத் தொட்டது. இந்த நிலையில் மார்ச் 17-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து ஒரு சவரன் 65,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை நேற்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 250 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் .66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 40 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் .8 ஆயிரத்து 290 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் .66 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

