தென்கொரியாவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழையால் 9 பேர்பலி.தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய்மழை கொட்டித்தீர்த்துவருகிறது. தலைநகர் சீயோலை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே இரவில் மணிக்கு 100 மிமீ அளவில் மிக கனமழை பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதனால் சியோல் மற்றும் இன்சியோன் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த மழைக்கு 9 பேர் பலியாகியுள்ளதாகவும் 6 பேர் மாயமானதாகவும் அந்நாட்டு அரச கூறியுள்ளது.