• Fri. Apr 26th, 2024

ஒமைக்ரான் தொற்றால் தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்

Byகாயத்ரி

Jan 4, 2022

ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருந்தாலும் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் வழிபாட்டு தலங்களை மூட வேண்டும்.

கடைகள் திறப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் போன்ற பரிந்துரைகளை சுகாதாரத்துறை சார்பில் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நாளை அல்லது நாளை மறுதினத்தில் இருந்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *