பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் டென்மார்க் நாட்டின் ஜூலி ஜேக்கப்சென் ஆகியோர் விளையாடினர்.
35 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், 21-15, 21.18 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அடுத்த சுற்று போட்டியில் டென்மார்க் நாட்டின் லைன் கிறிஸ்டோபர்சென்னுடன் சிந்து விளையாடுகிறார்.