தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் முக்கூட்டுமலை கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான சிவகாசி பிரபு, ஸ்ரீதர், முனைவர். தாமரைக்கண்ணன் போன்றோரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது,
நடுகல்: பொதுவாக நடுகல் மரபு தமிழகத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சங்க காலத்தில் இருந்தே நடுகல் எடுக்கும் மரபு இருந்து வந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக புள்ளிமான்கோம்பை நடுகல் மற்றும் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் குறிப்புகளில் இருந்தும் அறியலாம். இந்த நடுகற்கள் சங்ககாலம் முதலாக ஆநிரை கவர்தல் போரில் ஈடுபட்டவர்களுக்கும், விலங்குகளுக்கு எதிராக நடக்கும் மோதலில் ஈடுபடுபவர்களுக்கும் அல்லது ஏதேனும் வீரதீரச் செயல்களில் ஈடுபடும் வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து தொடர்ந்து வந்துள்ளது என்றே கூற வேண்டும்.
தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லானது நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் இரண்டு நபர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்களில் வலது புறம் உள்ள வீரன் சற்றே உயரமாகவும் உடைவாளினை வலது கையால் பிடித்த படியும் இடது புறம் உள்ள வீரன் சற்றே உயரம் குறைவாகவும் வாலினை கீழே ஊன்றிய படியும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இருவரின் தலையிலும் மகுடம் இடம்பெற்றுள்ளது. காதுகள் நீண்டு பத்திர குண்டலங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு கையானது இடுப்பில் வைத்தபடி நின்ற கோளத்தில் கம்பீரமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது போரில் வீரமரணம் அடைந்த காரணத்திற்காகவோ அல்லது போரில் தன் உயிரை காப்பாற்றிய வீரனுக்கு தன்னோடு தன்னை காப்பாற்றிய வீரனுக்கும் சேர்த்து அவரது வீரத்தை போற்றும் விதமாக எடுக்கப்பட்ட வீரக்கல்லாக இருக்கலாம் என்றும் இச்சிற்பம் தற்போது முக்கூட்டுமலைப்பகுதி மக்களால் ஊர்காவலன் சுவாமி என்று வணங்கி வருகின்றனர் என்றும் இந்த நடுகல்லின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம் என்று அவர்கள் கூறினார்கள்.
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]