87 வயதை அடைந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வயது என்பது வெறும் எண் தான் இதனை வாழ்க்கையில் பல பேரும் சொல்வது உண்டு. ஆனால் ஒரு சிலரே அதனை நிஜத்தில் நிரூபித்துக் காட்டுகின்றனர். அவர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். அரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா. பள்ளிப்படிப்பை முடிக்காத சவுதாலாவுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பது ஏக்கம். ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருந்து சவுதாலா அங்கிருந்தபடியே கடந்த 2017 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி உள்ளார். ஆனால் ஆங்கில பரிட்சை மட்டும் எழுதாமல் இருந்திருக்கின்றார். அதனால் சவுதாலா கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வை எழுதிய போதும் அதன் முடிவை அரியானா பள்ளிக் கல்வி வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அந்த தேர்வில் 88 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆகவே ஒரே தாவலில் பத்தாம் வகுப்பு, முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
இந்நிலையில் சவுதாலாவுக்கான மதிப்பெண்சான்றிதழை மாநில கல்வித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் வழங்கியுள்ளனர். அதனை அவர் பெருமிதத்தோடு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மற்றொரு சுவாரசியமான தன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானதாக கூறப்படும் தஸ்வி என்ற இந்தித் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அந்த திரைப்படத்தில் சிறையிலிருக்கும் அரசியல்வாதி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி செய்வது போல கதை அமைந்துள்ளது. தற்போது நிஜ கதாநாயகர் சவுதாலா பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் அவருக்கு ஸ்ரீ விநாயகர் அபிஷேக்பச்சன், நாயகி நிம்ரத் கவுர் போன்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பள்ளிப் படிப்பில் மட்டுமல்லாமல் அரசியலிலும் இந்த வயதில் சவுதாலா ஆக்டிவாக தான் செயல்பட்டு இருக்கின்றார். இந்திய அரசியலில் லோக் தள கட்சித் தலைவரான இவர் இப்போதும் அரியானா மாநிலம் முழுவதும் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார். ஆனால் பட்டப்படிப்பில் தனது நீண்ட கால கனவு நனவான மகிழ்ச்சியில் ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று கூவாத குறையாக குஷியாக உள்ளார் இந்த தாத்தா அரசியல்வாதி.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]