• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்..,

ByK Kaliraj

Jul 24, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (35). இவருக்கு வடமலாபுரத்தில் பிரகாஷ் பைரோ டெக் என்ற பெயரில் பட்டாசு கடை உள்ளது.

இவர் அவரது பட்டாசு கடையை சுற்றிலும் வேலி அமைத்து அரசு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்துள்ளார். இது தொடர்பாக திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.