விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டியில் குப்பைகளை எரித்த போது அதிலிருந்து தீ பரவி அருகில் உள்ள பழைய பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ பற்றி எரிந்தது.

ஆத்திபட்டியில் அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குடோனில் இருந்து பழைய பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.




