• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சேரம்பாடியில் பெண் தற்கொலை

உறுவினர்கள் கைவிட்டதால் அங்கன்வாடியில் வேலை பார்த்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.உடலை கைப்பற்றி போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர். சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் வசித்து வந்த விஜெயலட்சுமி வயது (55)இந்த அம்மையாருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்த நிலையில் இவருக்கு எந்த உதவியின்றி வாழ்ந்து வந்துள்ளார். இவர் கோரஞ்சால் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார்.இன்னிலையில் மாலை இவர் வீட்டில் தனியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டார் .

இந்த இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ளவர்கள் வீட்டை எட்டி பார்த்த போது உடல் கருகிய நிலையில் இருப்பதை பார்த்தவர் அக்கம் பக்கத்தாரை அழைத்துள்ளார். பொது மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது பின்பு தேவாலா டிஎஸ்பி செந்தில்குமார்.தேவாலா ஆய்வாளர்.அமுதா.உதவி ஆய்வாளர்.தினேஷ்குமார் மற்றும் காவலர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரை விசாரித்தனர் .பின்பு தடவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.