ஜிஎஸ்டி சட்டத்தில் கொண்டு வரப்படம் தொடர் மாற்றங்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன. இதனால், வணிகம் பாதிக்கப்பட்டு, அதை சார்ந்துள்ள சாமானிய மக்களுக்கு வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா உதகை பிங்கர்போஸ்டில் நடந்தது.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துக்கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து, சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்ட விதிகளை கடைப்பிடிப்பது குறித்து வணிகர்களிடம் தெளிவை ஏற்படுத்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், உதகை, குன்னூர், கோத்தகிரி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் உள்ள கடைகளின் வாடகை பிரச்சினையை தீர்க்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் வணிகர்கள் அடங்கிய வாடகை சீரமைப்புக்குழு தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வாடகையை சீரமைத்து நிர்ணயக்கும்.

அது வரை ஆட்சியர், ஆணையர்கள் உயர்த்தப்பட்ட வாடகையை வியாபாரிகள் செலுத்த நிர்பந்திக்கக்கூடாது. கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் தடை சட்டம் பாரபட்சமாக உள்ளது. அரசு தடை செய்துள்ள 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் விற்கக்கூடாது. இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யலாம். ஆனால் பெரு நிறுனங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களின் பொருட்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் உள்நாட்டு வணிகம் அழிந்து வருகிறது. உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும்.
உணவு பாதுகாப்பு சட்டங்கள், ஜிஎஸ்டி சட்டத்தில் தொடர் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவை பெரும் நிறுனங்களுக்கு ஆதரவாக உள்ளன. பிரதமரும், முதல்வரும் உரிய உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க வேண்டும்.
வணிகத்தை சார்ந்து 1 கோடி பேர் உள்ளனர். இந்த பிரச்சினை தொடந்தால் 10 ஆண்டுகளில் இவர்கள் வாழ்வாதாரம் அற்று போய்விடும். இதனால், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]