சிந்தனைத் துளிகள்
• வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறுண்டு
வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்…
• உன் எல்லை எதுவென்று உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய கவலை உனக்கெதெற்கு…
• நேற்றைய நினைவுகள் பயனற்றது….
நாளைய நிகழ்வுகள் கேள்விக்குறியே….
இன்று மட்டுமே நிஜம்…
ரசித்து கடப்போம் ஒவ்வொரு நொடியும்…
• ஒரு சிறந்த புத்தகம்,
ஒரு நல்ல நண்பனுக்கு சமம்…
• புத்தகங்களை திறந்து வைப்பின்…
ஜன்னலை போன்றே நல்ல காற்றாக,
கருத்துக்களும் வந்தடையும் நம்மை மகிழ்விக்க…