• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 26, 2021

எதுவும் இல்லாமல் பிறந்து
எல்லாம் வேண்டும் என அலைந்து
எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து
உயிரும் சொந்தமில்லை என உணர்ந்து
உலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான்
வாழ்க்கை

வர்ணங்கள் நிறைந்த வானவிலாய்
பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாய்
பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாய் பல
அனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை

வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்
உலகமே திரண்டு எதிர்திட்ட போதிலும்
உறவுகளே நம்மைப் பழித்திட்ட போதிலும்
உறுதியாய் நின்று ஜெயித்திடல் வேண்டும்