சிந்தனைத்துளிகள்
உடல் நலம் பெரிதும்
மனநலத்தைப் பொறுத்தது.
நம்மால் முடியாதது யாராலும் முடியாது.
யாராலும் முடியாதது
நம்மால் மட்டுமே முடியும்.
மனிதன் அடக்கம் என்ற போர்வையில்
தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.
நோய்களில் கொடிய நோய்
மூடநம்பிக்கை என்ற நோய்தான்.
மணிக்கணக்கில் பேசாமல்,
மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து.
எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும்,
திறந்த இதயமும் ஆகும்.
மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம்
உடையவர்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும்.