• Fri. Apr 19th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 1, 2022

சிந்தனைத்துளிகள்

 ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
 “அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .
 “அந்த வீட்டை இரண்டு மடங்கு விலைகொடுத்து வாங்க பலரும் தயாராகஇருந்தனர். ஆனால் இவன்விற்கவில்லை.
 “இப்போது அந்த வீடு அவன் கண் முன்னேஎரிந்துகொண்டிருந்தது.
 “ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதைஅணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .
 வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.
 “ஐயோ என் வீடு ! என் வீடு ! என்றுஅலறினான்.
 “அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்துஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் ?
 “இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .
 “இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்றுகூறினான்.
“இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. “அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.
 ” இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
 “அதே வீடு தான் ” ,
 “அதே நெருப்பு தான் ” ,
“ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது
அவனிடம் இல்லை.
 “” சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே
ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும்வரவில்லை. “வீட்டை வாங்கியவன் இப்போது மீதிபணத்தை தருவானா என்பது சந்தேகமே”என்றான். .
 “இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். “தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது. “சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.
 “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். “இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.
 “ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். “இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.
 “கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும்
மீண்டும் காணாமல் போய்விட்டது.
 “மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
 “இங்கு எதுவுமே மாறவில்லை ” அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு “,
இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. ” இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .”உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ” ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. “நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியதுஇதைத்தான் நம் நாட்டின் ஆன்மீகமும் சொல்கிறது

 எதை நீ இழந்தாய்… எதற்காக அழுகிறாய்…
 இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது…
 மாற்றம் என்பது மட்டுமே மாறாதது….
 கடமையை செய்… பலனை எதிர்பாராதே… ஏனெனில் கடமைக்கான பலனை இறைவன் தர மறப்பதில்லை
 அன்பாய் இருப்போம்..
 பண்பாய் இருப்போம்..
 அழிவிற்குப் பின்னும்
 அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *