சிந்தனைத்துளிகள்
• “நேரம் போகவில்லை என்பது வாழ்க்கையில்லை..
நேரம் போதவில்லை என்பது தான் வாழ்க்கை.!”
• “முயற்சி என்ற ஒன்று இருப்பதால் தான் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.. இல்லையேல் முடங்கி போயிருப்பான்.!”
• “நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக் கட்டைகளை கண்டு பதறாமல்.. அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும்..
நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என புரிந்து முன்னேறுவோம்.!”
• “விரும்பியதை அடைய எப்போதும் போராட வேண்டி இருக்கும்..
அந்த போராட்டம் தான் உன் விருப்பத்தின் மதிப்பை
மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும்.!”
• “வாழ்க்கையில் வாழ வழியில்லை என்று புலம்பாதீர்கள்..
நீங்கள் போகும் பாதைதான் வாழ்க்கை என்பதை மறந்து விடாதீர்கள்.!”