• Tue. Apr 16th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 12, 2022

சிந்தனைத்துளிகள்

• நீ வெற்றியை தேடி அலையும் போது வீண் முயற்சி என்று
சொல்லும் அவர்கள் தான் நீ வெற்றி அடைந்தவுடன்
விடாமுயற்சி என்று சொல்லி வாழ்த்துவார்கள்.

• உன்னை நீயே செதுக்கிக் கொள்ள
பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும்
தான் உனக்கு உளியாக இருக்கும்.

• துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்
அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான்
நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும்.

• வாழ்க்கையில் சேமிப்பை ஒரு போதும் அலட்சியம் செய்யாதீர்கள்
சேமிப்பை அலட்சியம் செய்பவர்கள் தன் வாழ் நாளில் ஒரு போதும்
செழிப்பை அடைய முடியாது.

• தவறு செய்வது இயல்பு அதே தவறை தொடர்ந்து செய்வது தான்
வாழ்நாளில் மிகப் பெரிய தவறாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *