சிந்தனை துளிகள்
ஏழையாய் ஆனாலும் பெரும்
செல்வந்தனாய் ஆனாலும்
பிறருக்காக வாழ்ந்திடேல்
பெரு மனிதனாய் போற்றப்படுவாய்…
அர்த்தமுள்ள வாழ்க்கைதனை
வாழ்ந்திட்ட ஒரு மனிதன்
மகானாய் போற்றப்படுவான்
இதுவே உலகத்தின் நியதி…
கிடைத்தற்கரிய அருங் கொடையாய்
கண்டெடுத்த பெரும் புதையலாய்
அளிக்கப்பட்ட இவ் வாழ்க்கையை
ஆனந்தமாய் அனுபவித்திடுவோம்…