சிந்தனைத்துளிகள்
• பணம் சில சமயம் நண்பனை எதிரியாகும்..
எதிரியை நண்பனாக்கும்.
• பெற்றுக்கொள்ள இரு கைகள் நீண்டிருக்க
கொடுத்துச்செல்ல ஒரு கையும் நீள்வதில்லை.
• குணம் இல்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது சென்று..
பணமில்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்றாகிவிட்டது.
• பிறரை கெடுத்து வாழ்வதை விடுத்து..
பிறருக்கு கொடுத்து வாழ்வோம் உயிருள்ள வரை.!
• அறிவு உடையவர்கள் வேறொன்றும் இல்லாதவராயினும் எல்லாம் உடையவரே. அறிவில்லாதவர் எல்லாமுடையவராயினும் ஒன்றுமில்லாதவரே.