காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தற்போது புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, எழுத்துத் தேர்வில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
இந்த தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும், என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தகுதி தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடக்கும். இந்த தகுதி தேர்வில் வெற்றி பெறுவோரின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும் என்று அறிவித்துள்ளது.