அதிமுகவின் இடைக்கால செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றும் தீர்பு வழங்கியது. இந்நிலையில் அதிகமுக பொதுக்குழு கூட்டம் துவங்கி நடைபெற்றுவருகிறது. மின்னனு அடையாள அட்டை உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பொதுக்குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேறப்பட்ட நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 4 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் . இது அதிமுகவில் மிக முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.