• Fri. Mar 29th, 2024

மின் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது – மதுரை தலைமை பொறியாளர்

Byமதி

Dec 2, 2021

கொரனோ தடுப்பூசி செலுத்தாத மின் ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என மதுரை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மண்டலத்தில் பணிபுரியும் மின் வாரிய ஊழியர்கள் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் கொரோனோ தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என மதுரை மண்டல தலைமை பொறியாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தடுப்பூசி செலுத்த முடியாதவர்கள் உரிய மருத்துவ சான்றிதழ்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது, இது மின் வாரிய ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஊழியர்கள் மத்தியில் கொரோனோ தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அவ்வாறு சுற்றறிக்கையை அனுப்பப்பட்டதாகவும், ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படமாட்டாது எனவும் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் உமா தேவி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *