• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஊர் தலைவர் முன்னிலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த தேனாடு பகுதியில் மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் சிறப்பு ஆய்வாளர் செல்வன் காவலர்கள் சிவகுமார் தலைமையில் தேணாடு ஊர் தலைவர் பீமா கவுடர் ஊர் பெரியவர்கள் ஜி. பில்லன் எம் ஜி ராமச்சந்திரன் கே கே ராமன் எம் பி ராமன் கே ராமச்சந்திரன் முன்னிலையில் ஊர் பொதுமக்கள் திரண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது .

இதில் கஞ்சா புகையிலை பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விளைவுகளைப் பற்றியும் மஞ்சூர் காவல் நிலையம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் கஞ்சா பயன்படுத்த படாத பகுதி என உறுதிமொழி எடுக்கப்பட்டனர்