• Fri. Apr 26th, 2024

வேலை நிறுத்தம் செய்தால் டிரைவர்-கண்டக்டர் சம்பளத்தில் பிடிக்கப்படும் -கேரள அரசு

ByA.Tamilselvan

Aug 28, 2022

வேலை நிறுத்ததால் ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய டிரைவர் -கண்டக்டர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவு.
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றைய தினம் 3 பணிமனைகளில் 49 டிரைவர்கள் மற்றும் 69 கண்டக்டர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அந்த பணிமனைக்கு ரூ.9 லட்சத்து 49 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கீட்ட அரசு அந்த தொகையை ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்ய முடிவு செய்தது. . இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஊழியரின் கணக்கில் இருந்து 5 தவணைகளாக ரூ.40 ஆயிரத்து 277 வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *