அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ரிலீஸ் நேரம் குறித்து ரகசிய பிளான் வைத்துள்ளாராம், போனி கபூர்!
ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்துள்ள வலிமை படம் 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போய், பல தடைகளை தாண்டி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த வாரம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு, எதிர்பார்ப்பிற்கு பிறகு பிப்ரவரி 24ம் தேதி வலிமை உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில், உலகின் பல நாடுகளிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ள முதல் அஜித் படம் வலிமை தான். அதுவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் ரிலீசாக உள்ள பெரிய நடிகரின், பெரிய பட்ஜெட் படம் என்பதால் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்ற த்ரில்லிங்கான உணர்வு அனைவரிடமும் நிலவுகிறது. எந்த வித ப்ரொமோஷனும் இல்லாமல், ரசிகர்களின் கிரேசை மட்டும் வைத்து வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
லேட்டஸ்ட் தகவலின் படி, வலிமை படம் தமிழகத்தில் மட்டும் 700 முதல் 1000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி ரிலீஸ் செய்யப்பட உள்ள வலிமை படத்தின் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியாகி விட்டது. ஆனால் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்திருப்பதால், படத்தின் ரிலீஸ் பற்றி மற்றொரு மாஸ்டர் பிளானை வகுத்துள்ளாராம் தயாரிப்பாளர் போனி கபூர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி ஃபஸ்ட் ஷோவை அதிகாலை 4 மணிக்கு திரையிட ஒரு பிளான் இருந்தாலும், ரசிகர்களின் ஆர்வத்தை பார்த்து நள்ளிரவு 1 மணிக்கு ஃபஸ்ட் ஷோவையும், 4 மணிக்கு இரண்டாவது ஷோவையும் திரையிடலாமா என போனி கபூர் ஆலோசித்து வருகிறாராம். காலை 4 மணி ஷோ உறுதியாகி விட்ட நிலையில், ஒரு மணி ஷோ பற்றி இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லையாம்.
இதுவரை கிடைத்த தகவலின் படி தமிழகத்தில் வலிமை ரிலீசாகும் அத்தனை தியேட்டர்களிலும் முதல் நாள் ஷோவிற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாம். அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் போர்டுடன் வலிமை ரிலீசாக உள்ளதாம். இந்த தகவல் அஜித் ரசிகர்களை அளவில்லாத உற்சாகத்தை தந்துள்ளதாம்.
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]