பொள்ளாச்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், தேர்தல் பணியை கண்காணிக்கவும், கட்சியை வெற்றி பெறச் செய்யவும், உட்கட்சி உள்குத்துக்களில் இருந்து வேட்பாளர்களை காப்பாற்றவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் இருந்து, பூத்துக்கு ஒருவர் என களமறிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., பல கோஷ்டிகளாக பிரிந்து, ஒருவருக்கொருவர் ‘உள்குத்து’ வேலை செய்து கொண்டு இருப்பதாக, அக்கட்சியின் விசுவாசிகளே புலம்புகின்றனர்.கடந்த சட்டசபை தேர்தலில் கோட்டை விட்ட கொங்கு மண்டலத்தை, இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கைப்பற்றியே ஆக வேண்டும், என, தி.மு.க., தலைமை கங்கணம் கட்டிக் கொண்டு தீவிரம் காட்டும் நிலையில், இந்த உட்கட்சி பஞ்சாயத்துகள், வெற்றி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் என தலைமைக்கு ‘ரிப்போர்ட்’ சென்றுள்ளது.இதையடுத்து, மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியிடம், ‘என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ தெரியாது. எந்த பிரச்னையும் வெற்றியை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொங்கு மண்டலத்தில் கொடி நாட்டியே தீர வேண்டும்,’ என, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.
இந்நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை பகுதிகளில் கட்சியில் நிலவும் பஞ்சாயத்துகள், ஒற்றுமையின்மையை கண்டு பயந்து போன அமைச்சர், உள்ளூர் நிர்வாகிகளை இதற்கு மேல் நம்பினால், சட்டசபை தேர்தல் கதி தான் ஏற்படும் என்பதை புரிந்து கொண்டார்.இதையடுத்து, தனது சொந்த ஊரான கரூரில் இருந்து, பூத்துக்கு ஒருவர் என தேர்தல் கண்காணிப்பாளர்களை இப்பகுதிகளில் களமிறக்கியுள்ளாராம். இதனால், வார்டு வாரியாக எந்த பிரச்னை நடந்தாலும், அவ்வப்போது அமைச்சர் கவனத்துக்கு சென்று விடுகிறதாம்.அப்படி, தினமும் நுாற்றுக்கணக்கான பஞ்சாயத்துகள் அமைச்சருக்கு ‘ரிப்போர்ட்’ செய்யப்படுகிறதாம். இந்த தேர்தலில் உள்குத்து வேலை பார்த்து, கட்சியின் வெற்றிக்கு வேட்டு வைக்க நினைப்பவர்களை ‘லிஸ்ட்’ போட்டு, தேர்தல் முடிந்ததும் களை எடுப்பது தான், கட்சி தலைமையின் முதல் வேலையாக இருக்கும்.
அது மட்டுமின்றி ஒவ்வொரு வேட்பாளரிடம், ‘கவலைப்படாதீங்க; கட்சி தலைமைக்கு உங்களது பிரச்னைகள் தெரிவிக்கப்படும். கட்சி கட்டுப்பாட்டை மீறி, தேர்தலில் நிற்பவர்கள் குறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணிகளை கவனிங்க, ‘வர வேண்டியது’ தானா வரும்,’ என சூசகமாக பேசி அனுப்பியுள்ளார்.அமைச்சர் எதுக்கு கூப்பிடுறாரு, என்ன நடக்குமோனு போன வேட்பாளர்கள், நிம்மதியடைந்துள்ளனர். ‘பெட்டி’ வந்திருச்சானு, வேட்பாளர்களிடம் கட்சியினர் கேட்க, அது, தனி செக் ஷன், அமைச்சரு பார்த்துக்குவாரு, நாம ஓட்டு சேகரிக்கற வேலைய பார்ப்போம்னு,’ கூறி கிளம்பினாங்க.
- திருப்பரங்குன்றத்தில் ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மோட்ச தீபம்திருப்பரங்குன்றம் அருகே வராஹி அம்மன் கோவிலில் ஒரிசாவில் ரயில் விபத்தில் பலியானவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றப்பட்டதுமதுரை மாவட்டம் […]
- இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய்10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்;2019ம் ஆண்டில் […]
- திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தனதிருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ […]
- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]