மாணவிகள் நினைத்தால் பாலியல் தொல்லை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி கூறினார்.
குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பள்ளிகளில் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கிறிஸ்துநகரில் உள்ள புனித அலோசியஸ் பள்ளி கலையரங்கில் நேற்று போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது :
தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்பவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் பணியாற்றிய போது ஏராளமான புகார்கள் வந்து, போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில், ஆசிரியர்களால் பாலியல் தொல்லை, மிரட்டல் இருந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை 1098, 181, 14417 என்ற எண்களுக்கு போன் செய்து தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரத்தை கூற வேண்டியதில்லை. புகாரை மட்டும் தெரிவித்தால் போதும். பாதிக்கப்பட்ட மாணவி தான் என்றில்லாமல், சக தோழிகள் கூட புகார் தெரிவிக்கலாம்.
மாணவிகள் நினைத்தால் பாலியல் தொல்லை பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். உங்களுக்கு தொல்லை தருபவர்கள் குறித்து தைரியமாக புகார் அளியுங்கள். தற்கொலை என்பது கோழைத்தனம்.
கோழைத்தனமான முடிவை எடுக்காதீர்கள். புகார் கொடுத்தால் பள்ளியை விட்டு நீக்கி விடுவார்களோ? என்ற அச்சம் தேவையில்லை. பாதிக்கப்படும் மாணவிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை வழங்கும். ஆசிரியராக இருந்தாலும் கூட தேவையில்லாமல் செல்போனில் பேசாதீர்கள். கல்விக்காக மட்டுமே செல்போன் வசதியை பயன்படுத்துங்கள். சமூக வலை தளங்களில் சிக்குவதால் தான் வாழ்க்கை விபரீதமாகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]
- இன்று ஒளிமின் விளைவுகளை கண்டறிந்த இராபர்ட் மில்லிகன் பிறந்த தினம்ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் […]
- “சண்டை காட்சிகளில் நடிப்பவர்களுக்குக் காப்பீடு வேண்டும்” – நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை!புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் […]
- விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் […]
- மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைதிருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் […]
- வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்குவட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஏழு […]
- விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனுகன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு […]
- அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானதுலைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் […]
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..,அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு […]
- தமிழக ஆளுநரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் கூறிவந்த […]
- குறள் 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. பொருள் (மு.வ): நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான […]
- அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் […]
- உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். […]
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]