பிரதமர் மோடி ,அமித்ஷா இருவரும் சேர்ந்து திமுக அரசை கருவறுத்துவிடுவார் என்று பிரபல நடிகர் ராதாரவி பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் உண்ணாவிரதபோராட்டம் நடத்திவருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பாஜக உறுப்பினர் நடிகர் ராதாரவி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் “திமுக அரசு கவனமாக இருக்க வேண்டும் ,மகாராஷ்டிராவில் இப்போது தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்தியாவில் 2 பெரிய ஆக்யூஸ்டுகள் இருக்கின்றனர்..ஒருவர் பிரதமர் மோடி,இன்னொருவர் அமித்ஷா இருவரும் திமுகவை கருவறுத்துவிடுவார்கள் என எச்சரித்துள்ளார்.