• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா..,

பெரும்பாலையில் திமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா முன்னாள் எம். எல். ஏ . இன்பசேகரன் திறந்து வைத்தார். பென்னாகரம்,ஜூன்.14.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை‌ கிராமத்தில் திமுக பிரமுகர் தேவராஜ்
அவர்களின் புதியதாக கட்டப்பட்ட இல்லத்தை பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் கழக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் இன்பசேகரன் புது மனையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் மாவட்டக் கழகப் பிரதிநிதி ஆரல்குந்தி தனபாலன் அனைவரையும் வரவேற்றார். மேலும் ஏரியூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான கோடல்பட்டி செல்வராஜ், பென்னாகரம் ஒன்றிய கழக செயலாளர்
மடம் முருகேசன், தர்மபுரி கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர்
துரைசாமி, தர்மபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்
கார்த்திக், தர்மபுரி கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சாந்தரூபன் , பெரும்பாலை கிளைக் கழகச் செயலாளர் சிவகுமார் , ஒன்றிய துணை செயலாளரும் கெண்டையண அள்ளி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சின்னு,
பென்னாகரம் ஒன்றிய மாணவரணி பெரியண்ணன், மாவட்ட பிரதிநிதி முனியப்பன்,
அய்யந்துரை, கடவுள் டிரேன்ஸ்போர்ட் உரிமையாளர் வைத்தீஷ்வரன், பெரும்பாலை முன்னாள் கிளைக் கழகச் செயலாளர் பூசாரி மணி , வினு, பழனிசாமி , ராஜா, முனிராஜ், திருமூர்த்தி, சேகர் கிளைக் கழகச் செயலாளர்கள் , அர்த்தனாரி, தங்கமணி,செலம்பன், ராதாகிருஷ்ணன் , சிவப்பிரகாசம் , கருணாகரன் , சிவகுமார் , பாட்ஷா , பால்ராஜ் ,
உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.