பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கோவை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்
கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி, மாவட்ட கல்விஅலுவலர்கள் பாண்டியராஜசேகரன்(இடைநிலை), புனிதா(தொடக்கநிலை), வள்ளியம்மாள் (பொள்ளாச்சி), கீதா(தனியார் பள்ளிகள்) கிக்கானி பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பேச்சுப்போட்டி, கதை எழுததல், கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பாடல் ஒப்புவித்தல், ஒவியம் வரைதல், தனிநடனம், குழுநடனம், ஒயிலாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம், கேலிசித்திரம் வரைதல், நாட்டுப்புற நடனம், இலக்கிய நாடகம், சமூக நாடகம், வாத்திய கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட 178 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 428 பள்ளிகளை சேர்ந்த 7966 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் 1899 மாணவ மாணவியர்கள் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றனர். பள்ளியில் கற்றுக்கொள்ளும் படிப்பு மட்டுமே ஒரு மாணவரை நல்ல சிறந்த மனிதனாக மாற்றாது. அதாவது, இன்றைய மாணவர்களிடம் பாடப்புத்தகத்தில் உள்ளதை படித்து தேர்வு எழுதி மதிப்பெண் வாங்குவது மட்டுமே நோக்கமாக உள்ளது.
பெற்றோர், ஆசிரியர், வயதான முதியோர் மற்றும் பெரியவர்களை மதிக்கவும், சக மனிதர்களோடு அன்புடன் பழகுவதும், பொறுமையாக இருப்பது, உள்ளிட்ட நல்ல குணங்களை வளர்த்து கொள்வது, தன்னம்பிக்கை உருவாக்குதல், போன்றவற்றை கற்றுகொடுத்து ஒரு மாணவனை நல்லமனிதனாக உருவாக்குவது, பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள், உள்ளிட்ட போட்டிகளாகும்.
பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சிறப்பாக செயல்படும் மாணவ-மாணவியர்கள், தங்கள் கல்லூரி காலங்களிலும் திறமைகளை வளர்ந்து கொண்டு சிறப்பாக செயல்படவேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் முக்கியம் என்று கருதாமல் படிப்புடன், விளையாட்டு, கலைபோன்ற போட்டிகளில் பங்குபெறவும் அவர்களை ஊக்குவிக்கவேண்டும். என தெரிவித்தார்.
தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதல்பரிசு பெற்ற 636 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]