மதுரை மாநகராட்சி மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை
மேயர் இந்திராணி பொன்வசந்த், வழங்கினார்.
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு, பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்தியாவில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி ஒரு வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 68 சதவீதம் குழந்தைகளுக்கு குடற்புழு தொற்று இருப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடற்புழு தொற்றானது மோசமான சுற்றுப்புற சுகாதாரத்தினாலும் முறையான கழிப்பறையை பயன்படுத்தாத காரணத்தினாலும் உருவாகின்றன.
இந்த குடற்புழுக்களால் குழந்தைகளுக்கு இரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தையினுடைய உடல்நலத்தை பாதிக்கின்றன.
மத்திய அரசு மேற்கண்ட குறைபாட்டை தவிர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தினமாக அனுசரித்து வருகிறது. இன்றைய தினம் (14.02.2023) ஒரு வயது முதல் 19 வயதுக்குப்பட்ட அனைவருக்கும் மற்றும் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மட்டும் அல்பென்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் 106 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும் 149 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 346 தனியார் பள்ளிகளிலும் 23 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் 19 தனியார் கல்லூரிகளிலும்,675 அங்கன்வாடி மையங்களிலும், 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 155 பகுதிகளிலும் என, மொத்தம் 1504 மையங்களில் 423722 குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கும் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட 125779 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
இந்த குடற்புழு நீக்க மாத்திரையால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகை தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடற்வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 549501 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட நபர்களுக்கு (21.02.2023) செவ்வாய்கிழமை அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். முன்னதாக, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியினை, மேயர் ஆணையாளர் ஆகியோர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.அர்ஜீன்குமார், உதவி ஆணையாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உதவி நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீகோதை, மண்டல மருத்துவ அலுவலர் மரு.சாந்திசுகாதார ஆய்வளர் கவிதா மருத்துவ குழுக்கள்மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]
- சோழவந்தான் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் […]
- ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்புஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் […]
- உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை.., விபத்து ஏற்படும் அபாயம்..!காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி […]
- தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியதுகுரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் […]
- நாகர்கோவிலில் மாணிக்கக் கற்கள் எனக் கூறி.., பெண்களை ஏமாற்றிய பூசாரிகள் மீது வழக்கு..!நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் […]
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை […]
- பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து தங்க நகைகள் வாங்கிய திருடன்மதுரை வாடிப்பட்டியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம டூப்ளிகேட் ஏடிஎம் கார்டை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் மனநிறைவு… மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் […]
- அதானி விவகாரம்- 12வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது […]
- பொது அறிவு வினா விடைகள்
- கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக […]