மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஓட்டுனர்கள் ,நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை ,சம்பளம் குறைப்பு, பணி நீக்கம், நடவடிக்கைகள் பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.