• Sat. Apr 20th, 2024

பெங்களூருவில் இடிந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்!

Byகாயத்ரி

Oct 9, 2021

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிநகர் அருகே டாக்டர்ஸ் லே-அவுட், 2-வது கிராசில் தரை தளத்துடன் கூடிய 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த கட்டிடத்தில் 8 வீடுகள் உள்ளன. அவற்றில் 3 வீட்டில் மட்டும் குடும்பத்தினர் வசித்து வந்தனர். மற்ற 5 வீடுகளும் காலியாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று காலையில் திடீரென்று 3 மாடி கட்டிடத்தின் ஒருபகுதி லேசாக சரிந்தது. இதனால் குடியிருப்பில் வசிக்கும் 3 குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வீடுகளில் இருந்து 3 குடும்பத்தினரும் வெளியே வந்தார்கள். ஆனால் அவா்களது உடைமைகள் வீடுகளிலேயே இருந்தது. பின்னர் நேற்று மதியம் திடீரென்று 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து பக்கத்து வீட்டின் மீது சாய்ந்தது. ஆனால் கட்டிடம் இடிந்து முழுவதுமாக கீழே விழாமல் பக்கத்து கட்டிடத்தின் சாய்ந்தபடி நின்றது. அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் காலையிலேயே வெளியே வந்து விட்டதால், அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுபற்றி அறிந்ததும் ராமமூர்த்திநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. முன் எச்சரிக்கையாக அக்கம் பக்கத்தில் வசித்தவர்களும், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்கள். இதுகுறித்து தகவல் அறிந்தத மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, சம்பவ இடத்திற்கு சென்று இடிந்து விழுந்த கட்டிடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கமிஷனர் கவுரவ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூரு கஸ்தூரிநகரில் தரைதளத்துடன் 2 மாடி வீடு கட்டுவதற்கு கடந்த 2012-ம் ஆண்டு உரிமையாளர் அனுமதி பெற்றிருந்தார். 2014-ம் ஆண்டு தான் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநகராட்சியின் அனுமதியை மீறி 3 மாடி கட்டிடத்தை உரிமையாளர் கட்டி இருந்தார். வீட்டுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை பெற்றுவிட்டு, வேறு ஒருவரிடம் விற்றிருந்தார். ஆனால் மாநகராட்சியிடம் இருந்து என்.ஓ.சி. பெறவில்லை.


விதிமுறைகளை மீறி கூடுதலாக 1 மாடி கட்டி இருப்பதால், கட்டிடம் சாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிவில் சட்டம் மற்றும் கிரிமினல் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டுள்ளேன். உடனடியாக 3 மாடி கட்டிடம் இடித்து அகற்றப்படும். இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Related Post

வாக்குச் சாவடி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கு வழியாக செல்லும் காட்சி
அசாமில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *