• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

குளத்திதுக்குள் வீடு காட்டிவிட்டோமோ? வெளிவராத குமரியின் ஒரு பகுதி

Byமதி

Nov 17, 2021

கன்னியாகுமரியில் மழை ஓய்ந்தது. மழை வெள்ளம் வடியத்துவங்கியது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் இன்னும் சில இடங்களின் நிலைமை இதுதான். குளத்தில் வீடு காட்டிவிட்டோமோ? என்ற சந்தேகம் வீட்டின் உரிமையாளருக்கே வரும்வகையில் மழைவெள்ளம் இன்னும் வடிந்த பாடில்லை.

திமுக அதிமுகவை குறை சொல்லுவது.. அதிமுக திமுகவை குறை சொல்லுவது.. என்பதைத் தாண்டி, ஒவ்வொரு வருடமும் மழை வெள்ளத்தில் கன்னியாகுமரி, சென்னை, கடலூர் போன்ற மாவட்டங்களில் சிக்கித் தவிப்பது பொதுமக்கள் மட்டுமே..

முதல்வர் பார்வை இடுக்கிறார்.. எதிர்கட்சித் தலைவர்கள் பார்வை இடுக்கிறார்கள்.. பேட்டி கொடுக்கிறார்கள்.. நிவாரணம் வழங்கப்படும்… என்பதை தாண்டி இனி இதுபோல ஒரு நிலை ஏற்ப்படமால் தடுப்பதே அரசின் தலையாக் கடமை… இதுவே மக்களின் தேவையும்..