கன்னியாகுமரியில் தானுலிங்க நாடார் 108 வது பிறந்த தினத்தை முன்னிட்டுநடைபெற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி சார்பாக மாநகரத் தலைவர் தியாகராஜன் தலைமையில் பொதுச் செயலாளர் பிரதீஷ் மற்றும் மாநகர துணைத் தலைவர் அன்புச்செல்வன் ராஜகமங்கலம் ஒன்றிய செயலாளர் குமரி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இருசக்கர பேரணி தெங்கம்புதூர் சந்திப்பிலிருந்து நாகராஜா திடல் வந்தடையும். அதன் பின்பு பொத்தையடி தானுலிங்க நாடார் நினைவிடத்தில் இந்த பேரணி நிறைவு பெறும். இந்த இருசக்கர வாகன பேரணியை பாஜக மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும் டாக்டர் .முத்துராமன் துவக்கி வைத்தார் மாவட்ட பொதுசெயலாளர் ஜெகநாதன் மற்றும் கட்சி தெண்டர்கள் கலந்துகொண்டனர்.