• Mon. Apr 28th, 2025

அடிக்கடி விசிட் அடிக்கும் ஒற்றை யானையால் பக்தர்கள் அச்சம்!!

BySeenu

Apr 8, 2025

கோவை, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அடிக்கடி ஒற்றை யானை வருவதும் , அதனை வனத் துறையினர் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் வனத்துறையில் வறட்சியான சூழல் நிலவுவதால் உணவுக்காகவும் , தண்ணீருக்காகவும் பூண்டி வெள்கியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஒற்றை யானை வந்த நிலையில் தண்ணீர் டேங்கை கவிழ்த்து தண்ணீர் குடிப்பதும் , குப்பை தொட்டில்யில் கிடக்கும் உணவை உண்ணும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்த ஒற்றை யானையின் தேவையை உணர்ந்து அதற்கான உணவும் நீரும் வனத்துக்குள் கிடைக்கும் வகையில் நீர் தொட்டிகளையும் உணவு கிடைக்க வழிவகையும் செய்ய கோரிக்கை எழுந்து உள்ளது.